search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன குளங்கள்"

    • 200 பாசன குளங்கள் நிரம்பியது
    • திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் பர வலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இடை விடாது மழை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.

    கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கொட்டா ரத்தில் அதிகபட்சமாக 14.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்க ளில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்களில் 200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டிய நிலையில் தற்பொழுது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.46 அடியாக உள்ளது. அணைக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.50 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 2.6, களியல் 3, கொட்டாரம் 14.2, குழித்துறை 4.2, மயிலாடி 10.2, நாகர்கோவில் 5.2, புத்தன்அணை 3, தக்கலை 1.4, குளச்சல் 6, இரணியல் 8.4, பாலமோர் 1.4, மாம் பழத்துறையாறு 2, அடையா மடை 4.2.

    • சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது
    • குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    கிள்ளியூர் :

    புதுக்கடை அருகே பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் மேலகுளம் என்ற காட்டத்திகுளம் உள்ளது. மிகப்பழமையான இந்த குளம் தற்போது சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது. கடுமையான கோடை காலங்களிலும் இயற்கையாக ஊற்று நீர் அதிகம் சுரப்பதால் இந்த குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை.

    இதனால் கோடை காலங்களில் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த குளத்தில் குளிக்க வருவது வழக்கம். இந்த குளத்தை நம்பி தற்போது சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமாக வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போதும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் குளத்தின் அடிமடை ஷட்டரை ஏதோ எந்திரத்தின் உதவியுடன் உடைத்து, தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதனால் தண்ணீர் வேகத்தால் பல ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீராதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பட்டணம்கால் பிரிவு நீர்வளத்துறையின் இளநிலை பொறியாளர் (பொறுப்பு) பேபி உஷா தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    • பாசன குளங்கள் வறண்டது
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 20.80 அடியாக சரிவு

    நாகர்கோவில், ஜூன்,28-

    குமரி மாவட்ட விவசாயிகள் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1500 ஹெக்டோரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். பூதப்பாண்டி,அருமநல்லூர், சுசீந்திரம், சுங்கான் கடை, தக்கலை பகுதிகளில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் நேரடி நெல் விதைப்பணியும் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் களை எடுக்கும் பணியிலும் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடைமடை பகுதி வரை தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பேச்சிபாறை அணை பாசனத்திற்காக கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்கள் ஆகியும் கடைமடை கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.

    சானல்கள் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தற்பொழுது சானல்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால் அணை களின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. பருவமழையும் பெய்யாமல் தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவதால் அணை களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 20.80 அடியாக இருந்தது. அணைக்கு 27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் 36.49 அடியாக உள்ளது. அணைக்கு 487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 718 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 2 அணை களில் இருந்தும் வெளி யேற்றப்படும் தண்ணீர், தோவாளை சானல், அனந்தனார் சானல்களில் விடப்பட்டு வருகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.20 அடி யாகவும், மாம்பழத்துறையார் அணை நீர்மட்டம் 3.23 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் த ண்ணீரின்றி காணப்படுகிறது. பெரும்பாலான குளங்கள் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் லேசாக மழை பெய்து வருகிறது.

    மற்ற இடங்களில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மழையை எதிர்நோக்கி வி வசாயிகள் காத்திருக்கி றார்கள். வருண பகவான் கை கொடுத்தால் மட்டுமே விவசாயம் செய்து உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயி கள் தெரிவித்தனர்.

    • சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
    • அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குளுகுளு சீசன் நிலவுகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    நேற்றும் பூதப்பாண்டி, தக்கலை, புத்தன் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. தற்பொழுது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திற்பரப்பில் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று வருகை தந்திருந்தனர்.

    இதையடுத்து திற்பரப்பு அருவியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதையடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.50 அடியாக இருந்தது.

    அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு 110 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்பி வருகிறது.

    200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    ×